Friday, February 29, 2008

கனா காணும் காலங்கள்
- ஆம், நிச்சயமாக நம் பள்ளி நாட்கள் தாம்!

மிகுந்த சுவையுடன் அசை போடும் நினைவுகள்.

குடும்பம் என்ற வட்டத்திற்கு அப்பாற்பட்டுக் கிடைத்த முதல் அன்பு: நண்பர்கள்.
அவர்களுடன் விளைந்த சிறு மோதல்கள், அதனைத் தொடர்ந்த அன்புப் பரிமாற்றங்கள், அரும்புக் காதல்கள் என்று பல நினைவில் நீங்கா எண்ணங்கள்; இலட்சியங்களை சாதிக்கும் குணங்கள்,நம்மை அறியாமலேயே விதையிடப்பட்ட பருவம்: பள்ளிப் பருவம்.

இத்தகைய அருமையான பள்ளிப் பருவத்தை மையமாகக் கொண்ட "கனா காணும் காலங்கள்" என்னும் விஜய் டிவி நிகழ்ச்சி நான் விரும்பிப் பார்க்கும் ஒன்று.

அத்தியாயம் 267-ல், நண்பர்களுக்கிடையே நிகழும் மோதல்களினால் ஏற்படும் வலியை அற்புதமாக ஒரு கவிதையின் மூலம் சொல்லி இருந்தார்கள்; இதோ உங்களுக்காக்:

நண்பா!

நீ பறவை, நான் மரம்.
என் கிளையை காயப்படுத்திவிட்டு உயர எழும் உன் கால்கள்;
உயர உயர நீ பறப்பாய், காயப்பட்ட நானோ கண்ணீருடன்;
எல்லைகளைத் தொட்டுக் களைத்து நீ திரும்பி வருவாய் இளைப்பாற
என் கிளைகள் எப்போதும் காத்திருக்கும்.


பள்ளி பருவத்தில் நமக்கு நம்மீது இருந்த நம்பிக்கையை நினைவூட்டுவதாக அமைந்தது மற்றொன்று:

நான் மலையில் கல்லுடைப்பதாக எண்ணி
அணைவரும் என்னை அலட்சியமாக பார்த்தார்கள்
அவர்களுக்குத் தெரியவில்லை நான் மலையை
உடைத்துக் கொண்டிருக்கிறேன் என்று.

4 comments:

Unknown said...

kalakiputteenga talaiva...

i ll try to rise myself to ur expectations!
anyway thanks for keepin me on guard :)

PK said...

Kana kanum kalangal!
Neenga sonna mathiri neraya ninaivugal tharalam...
Aanalum, palli paruvathilae kadhal, tharkolai muyarchi endru mugam sulikka vaikira katchigalum irukindranavae!

Vigneshwar Ramakrishnan said...

@புனித் கைலாஷ்:

பள்ளி பருவத்தில் காதல் சகஜம் என்றே தோன்றுகிறது. ஆண்-பெண் வேற்றுமை அறிவது இக்காலக்கட்டத்தில் தான். ஆதலின் இவ்வயதில் அரும்புக்/அறியாக் காதல் ஆச்சரியமோ முகம் சுளிக்கும் விஷயமாகவோ எனக்குத் தோன்றவில்லை
:-)
தற்கொலை...நிலைமை தெரியவில்லை. ஆனால் சில 'உடல் வருத்துதல்' கண்டிருக்கிறேன்.
எனினும், அதில் வரும் மலரும் நினைவுகளில் நீந்துவோமே....நிந்திக்காமல்
:-)

Madurai citizen said...

பழசு நடந்து போனது
நடப்பது நாளையே
நடந்துகொண்டிருக்கும்போது கனவு எதற்கு?
நல்லதை நினை, நல்லதை கேள், நல்லதை பார்!
எல்லாம் நன்மைக்கே, நடப்பதும் நன்மைக்கே!